Jun 26, 2026
Thisaigal NewsYouTube
41 பூனைகளின் இறப்புக்குக் காரணமான பெண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

41 பூனைகளின் இறப்புக்குக் காரணமான பெண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

கடந்த மார்ச் மாதம், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 36 பூனைகளைப் பட்டினியால் வாடவிட்டதோடு, 41 பூனைகளின் இறப்புக்குக் காரணமானதாகக் கூறப்படும் வழக்கில், பகுதிநேர பெண் நில அளவையாளர் ஒருவர் பெட்டாலிங் ஜெயா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

சுபாங் ஜெயாவை சேர்ந்த 49 வயது லீ ரியோ ஜின் அந்தப் பெண்ணின் வீட்டில் கால்நடை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, , 41 பூனைகளின் உடல்கள் குளிர்சாதனைப் பெட்டிகளிலும், 36 பூனைகள் மெலிந்த நிலையில் கூண்டுகளிலும் கண்டெடுக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பெண், தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

லாபுவான் விமான நிலைய ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

ஜெலுத்தோங் ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" – ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்