Mar 15, 2026
Thisaigal NewsYouTube
அவதூறு வழக்கு : வான் அஸ்ரி குற்றத்தை மறுத்தார்
தற்போதைய செய்திகள்

அவதூறு வழக்கு : வான் அஸ்ரி குற்றத்தை மறுத்தார்

Share:

கோலாலம்பூர், ஜன - 8,

அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை மறுத்துள்ளார்
ப்லோகர் வான் அஸ்ரி வான் டெரிஸ்.

நடப்பு அரசாங்கமானது இஸ்ரேல் சார்பு மற்றும் மேற்கத்திய சார்பு கொண்டதாக இருக்கின்றது என வான் அஸ்ரி கூறிய நிலையில், அவர் மீது அவதூறு சட்ட 1948 இன் கீழ் செஷன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டது.

அந்தக் கூற்றை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, முகநூல் காணொலி வாயிலாக வெளியிட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆயிரம் வெள்ளி அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

வான் அஸ்ரிக்கு 7 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்படவும் இந்த வழக்கு பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி என் ப்ரிசில்லா ஹெமாமாலினி முடிவு செய்தார்.

Related News