பணி ஓய்வுப்பெறும் வயது வரம்பை அரசாங்கம் 60 வயதிலிருந்து 65 ஆக உயர்த்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியில் உண்மையில்லை. ஒரு பேராசிரியரை மேற்கோள்காட்டி கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிட்டப்பட்ட ஒரு கட்டுரையை அடிப்படையாக கொண்டு அண்மையில் வெளியிடப்பட்ட அந்த செய்தியில் துளியளவும் அடிப்படையில்லை என்று மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணி ஓய்வுப்பெறும் வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து அந்த பேராசிரியர் தனது கருத்தை தெரிவித்துள்ளாரே தவிர அது அரசாங்கத்தின் முடிவு அல்ல என்பதையும் அந்த ஆணையம் விளக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


