Apr 30, 2026
Thisaigal NewsYouTube
பதிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே ரத்தம் சேகரிக்கும் சேவைகள்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பதிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே ரத்தம் சேகரிக்கும் சேவைகள்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Share:

சுகாதார பரிசோதனைகள் மற்றும் ரத்தம் எடுக்கும் சேவைகளை வழங்கும் சமூக மருந்தகங்கள், பதிவு செய்யப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இடங்களில் மட்டுமே இந்தச் சேவைகளை வழங்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

1998 ஆம் ஆண்டு சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டத்தன் கீழ் உரிய அனுமதியின்றி இந்தச் சேவைகளை வழங்குவது சட்டப்படி குற்றமாகும்.

மேலும், இந்த விதியை மீறுபவர்களுக்கு 5 லட்சம் 0 ரிங்கிட் வரை அபராதம், ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம். நோயாளிகளின் பாதுகாப்பைப் பேணவும், உரிமம் பெற்ற இடங்களில் மட்டுமே இந்தச் சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் சுகாதார அமைச்சு தனது அமலாக்கத்தை தீவிரப்படுத்தவுள்ளது.

Related News