வாகனமோட்டி ஒருவர் திடீரென்று வலிப்பு நோய்க்கு ஆளானதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள இடுகாட்டிற்குள் பாய்ந்தது.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் பினாங்கு, கெபாலா பாதாஸ், ஜாலான் கெடா-வில் நிகழ்ந்தது.
இதில் 37 வயதுடைய கார் ஓட்டுநர், விலா எழும்புப் பகுதியில் பலத்த அடியுடன் உயிர் தப்பியுள்ளார் என்று செபெராங் பெராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் சூல்கிஃப்லி சுலைமான் தெரிவித்தார்.








