Jan 23, 2026
Thisaigal NewsYouTube
முற்போக்கான சம்பளக் கொள்கை,  ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படலாம்
தற்போதைய செய்திகள்

முற்போக்கான சம்பளக் கொள்கை, ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படலாம்

Share:

மலேசியர்களின் சம்பள முறையில் மாபெரும் சீரமைப்பை ஏற்படுத்த வல்ல, முற்போக்கான சம்பள கொள்கை, அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் அமல்படுத்தப்படலாம் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

முற்போக்கான சம்பள முறையை இலக்காக கொண்டு தேவையான உள்ளீடுகள், வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

இதற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிக் காட்டிவிட்டதால் இனி இதனை பட்ஜெட்டில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ரஃபிஸி ரம்லி விளக்கினார்.

உற்பத்தித் திறனை அடிப்படையாக கொண்டு சில கவர்ச்சிகரமான அனுகூலங்களுடன் முற்போக்கான சம்பள முறை அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பிரதமர் கோடி காட்டிருப்பது தொடர்பில் கருத்து கேட்டபோது ரஃபிஸி ரம்லி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு