வெள்ளப் தடுப்புக் குளங்கள் அமைந்த பகுதிகளில் மேம்பாட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய முந்தைய அரசின் முடிவு “முட்டாள்தனமானது” என்று கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ சாடியுள்ளார்.
அது போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கோலாலம்பூரில் வெள்ளத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட பகுதிகளில், 70 விழுக்காடு இழக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பேரிடர்களை சமாளிக்க தேவையான மாற்று பாதுகாப்பு நிலப்பரப்புகள் தற்போது போதுமான அளவில் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனிடையே, இந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டது தொடர்பான விசாரணையில், ஊழலுக்கான ஆதாரங்கள் இல்லையென எஸ் பி ஆர் எம் அறிவித்துள்ளது குறித்து, அவர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.








