தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் எஸ்பிஎம் தேர்வில் சிறந்து விளங்கிய 67 மாணவர்களுக்கு, அவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் மொத்தம் 125,000 வெள்ளி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங், தெலுக் இந்தான் சான் மின் தேசிய வகை இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் இப்பரிசுகளை வழங்கினார். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 3,000 வெள்ளி வரை வழங்கப்பட்ட இந்தத் திட்டம், மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங் உடனிருந்தார்.








