திரெங்கானு மாநிலம், ஜாபோர் தோட்டப்புறம் அருகே ஜாலான் ஜெராங்காவ்-ஜாபோர் சாலையின்160-வது கிலோமீட்டரில் நேற்று இரவு 7.58 மணியளவில், சாலையைக் கடந்த யானை மீது கார் மோதி விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் பின்னால் வந்த மற்றொரு காரும் மோதியதில் இரண்டு கார்களில் இருந்த 3 பேர் லேசான காயமடைந்தனர்.
முதல் காரை ஓட்டிச் சென்ற 29 வயதான அமிருல் அஃபிக் ஆஸ்மி கையில் காயமடைந்த நிலையில், அவரது மனைவி ஃபர்ஹாயின் ஜோலியுஸ் கால் மற்றும் மார்பில் காயமடைந்தார்.
இந்நிலையில், பின்னால் வந்த காரை ஓட்டிச் சென்ற வான் முஹமட் ஃபையிஸ் ஃபக்ருல்லா வான் முஹமட் ஸைனால் முழங்காலில் லேசான காயமடைந்தார்.
மூவரும் கெமாமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விபத்து தொடர்பான வாகனக் கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








