பிரேக் செயலிழந்ததால் விரைவு பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பயணிகள் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 257 ஆவது கிலோமீட்டரில் கோல கங்சார் அருகில் நிகழ்ந்தது. 26 பயணிகளுடன் அந்த விரைவு பேருந்து பினாங்கிலிருந்து கோலாலம்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் முகமடுல் எஹ்சான் முகமட் ஸாயின் தெரிவித்தார். பிரேக் செயலிழந்து விட்டது என்பதை அறிந்தவுடன அந்தப் பெருந்தை நிறுத்துவதற்கு அதன் ஓட்டுநர் முயற்சித்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


