பிரேக் செயலிழந்ததால் விரைவு பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பயணிகள் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 257 ஆவது கிலோமீட்டரில் கோல கங்சார் அருகில் நிகழ்ந்தது. 26 பயணிகளுடன் அந்த விரைவு பேருந்து பினாங்கிலிருந்து கோலாலம்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் முகமடுல் எஹ்சான் முகமட் ஸாயின் தெரிவித்தார். பிரேக் செயலிழந்து விட்டது என்பதை அறிந்தவுடன அந்தப் பெருந்தை நிறுத்துவதற்கு அதன் ஓட்டுநர் முயற்சித்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


