பிரேக் செயலிழந்ததால் விரைவு பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பயணிகள் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 257 ஆவது கிலோமீட்டரில் கோல கங்சார் அருகில் நிகழ்ந்தது. 26 பயணிகளுடன் அந்த விரைவு பேருந்து பினாங்கிலிருந்து கோலாலம்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் முகமடுல் எஹ்சான் முகமட் ஸாயின் தெரிவித்தார். பிரேக் செயலிழந்து விட்டது என்பதை அறிந்தவுடன அந்தப் பெருந்தை நிறுத்துவதற்கு அதன் ஓட்டுநர் முயற்சித்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


