சாலைபோக்குவரத்து இலாகாவான ஜேபிஜே வின் சாலைத்தடுப்பு சோதனையின் போது, அதன் அமலாக்க அதிகாரியை மோட்டார் சைக்கிளில் மோதித் தள்ளி காயம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
25 வயது நோர் கைருல் அஸ்வா அசிசி என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்தமன் அப்துல் கானி அபாரதத் தொகையை விதித்தார்.
அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு உத்தரவிட்டார்.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சிரம்பான் - போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28 ஆவது கிலோமீட்டரில் சாலைத் தடுப்பு சோதனையில் ஈடுபட்டு இருந்த ஜேபிஜே அதிகாரி 29 வயதுடைய முஹமாட் நுர்ஹாகிம் முஹமாட் ராசிஃப் என்பவரை மோட்டார் சைக்கிளில் மோதி,காயம் விளைவித்ததாக நோர் கைருல் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


