சாலைபோக்குவரத்து இலாகாவான ஜேபிஜே வின் சாலைத்தடுப்பு சோதனையின் போது, அதன் அமலாக்க அதிகாரியை மோட்டார் சைக்கிளில் மோதித் தள்ளி காயம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
25 வயது நோர் கைருல் அஸ்வா அசிசி என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்தமன் அப்துல் கானி அபாரதத் தொகையை விதித்தார்.
அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு உத்தரவிட்டார்.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சிரம்பான் - போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28 ஆவது கிலோமீட்டரில் சாலைத் தடுப்பு சோதனையில் ஈடுபட்டு இருந்த ஜேபிஜே அதிகாரி 29 வயதுடைய முஹமாட் நுர்ஹாகிம் முஹமாட் ராசிஃப் என்பவரை மோட்டார் சைக்கிளில் மோதி,காயம் விளைவித்ததாக நோர் கைருல் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்


