சாலைபோக்குவரத்து இலாகாவான ஜேபிஜே வின் சாலைத்தடுப்பு சோதனையின் போது, அதன் அமலாக்க அதிகாரியை மோட்டார் சைக்கிளில் மோதித் தள்ளி காயம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
25 வயது நோர் கைருல் அஸ்வா அசிசி என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்தமன் அப்துல் கானி அபாரதத் தொகையை விதித்தார்.
அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு உத்தரவிட்டார்.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சிரம்பான் - போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28 ஆவது கிலோமீட்டரில் சாலைத் தடுப்பு சோதனையில் ஈடுபட்டு இருந்த ஜேபிஜே அதிகாரி 29 வயதுடைய முஹமாட் நுர்ஹாகிம் முஹமாட் ராசிஃப் என்பவரை மோட்டார் சைக்கிளில் மோதி,காயம் விளைவித்ததாக நோர் கைருல் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


