பத்தாங் பாடாங் நவ. 17-
பத்தாங் பாடாங் மாவட்டத்தில் சுங்காய் அருகே உள்ள Kg Klah Baru பல்நோக்கு மண்டபத்தில் செயல்பட்டு வந்த தற்காலித் துயர் துடைப்பு மையம் இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டது.
பத்தாங் பாடாங் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் தலைவர் Ahmad Redhauddin Ahmad Shokori , தெரிவிக்கயில், வெள்ளம் குறைந்த பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.
தற்போது, வெள்ளப் பேரிடர் சீரடைந்து பாதுகாப்பான நிலைமையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.








