கெடா,ஆ௧ஸ்ட் 04-
ஏஜென்சி ஒன்றுக்குச் சொந்தமான 30 ஆயிரம் ரிங்கிட் பணத்தை மோசடி செய்தது தொடர்பாக, இன்று KEDAH, ALOR SETAR, SESYEN நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட விவசாய நில அமைப்பின் நிர்வாகியான 49 வயது NURIZAH NOORDIN குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
நீதிமன்றத்தில், நீதிபதி N PRISCILLA HEMAMALINI முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், அவர் அந்த வாக்குமூலத்தை அளித்தார்.
2019-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி, மாலை 3.30 மணிக்கு, கெடா, ஜித்ராவில் உள்ள வங்கி ஒன்றில், அந்த பெண் சொந்த உபயோகத்திற்காக, PPK LUBUK BATU-வின் 30 ஆயிரம் ரிங்கிட் காசோலையை ROSLIN ALLIAS என்ற பெயரில் பணமாக மாற்றி பண மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அதே குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 40 ROSLIN, குற்றத்தை மறுத்தார் மறு விசாரணை கோரியுள்ளார்.
இந்நிலையில், அவ்வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








