கோலாலம்பூர், ஜூலை 03-
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி பதவி விலகிய மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகம் தலைவர் ரஹ்மத் முகமது - டிற்கு பதிலாக அந்த ஆணையத்தின் புதிய தலைவர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார் என்று சட்டத்துறை துணை அமைச்சர் M. குலசேகரன் தெரிவித்துள்ளார்.
சுஹாகம் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவினர், தனது தேர்வுக்குரிய நபரை தேர்வு செய்தப் பின்னர் அது குறித்து அரசாங்கம் அறிவிக்கும் என்று குலசேகரன் குறிப்பிட்டார். .
சுஹாகம் சட்டத்தின் 11A விதியின் கீழ் புதிய தலைவர் தேர்வு தொடர்பில் கடந்த ஜுன் 7 ஆம் தேதி ஒரு கூட்டம் நடைபெற்று இருப்பதாக அவர் தெரிவித்தார்.








