Jul 4, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீர் மீது நடவடிக்கையில்லை
தற்போதைய செய்திகள்

துன் மகாதீர் மீது நடவடிக்கையில்லை

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-

ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பவளப் பாறைத் தீவான பத்து பூத்தே தீவு, அண்டை நாடான சிங்கப்பூருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

துன் மகாதீரின் வயது காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.

பத்து பூத்தே தீவை மலேசியா இழந்ததற்கு துன் மகாதீர் தவறு செய்திருந்தாலும், 100 வயதை எட்டியுள்ள அந்த முன்னாள் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் நோக்கம் கொண்டு இருக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

அப்படியென்றால் 100 வயது எட்டியுள்ள துன் மகாதீர், பத்து பூத்தே தீவு விவகாரத்தில் குற்றம் இழைத்துள்ளாரா என்று எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு பதில் அளித்த அன்வார், ஆம், அவர் தவறு செய்துள்ளார் என்று பிரதமர் பதில் அளித்தார்.

இருந்த போதிலும் அந்த மூத்த தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தாமும் அமைச்சரவை உறுப்பினர்களும் ஏகமனதாக முடிவு செய்து இருப்பதாக அன்வார் விளக்கினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

துன் மகாதீர் மீது நடவடிக்கையில்லை | Thisaigal News