Jul 14, 2026
Thisaigal NewsYouTube
சரவாகில் வறண்ட வானிலை: திறந்தவெளி எரிப்பிற்குத் தடை
தற்போதைய செய்திகள்

சரவாகில் வறண்ட வானிலை: திறந்தவெளி எரிப்பிற்குத் தடை

Share:

சரவாக் மாநிலத்தில் நிலவும் வெப்பமான வறண்ட வானிலை காரணமாக, அங்கு திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அம்மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜூலை 1 முதல் இதுவரை மாநிலம் முழுவதும் 49 திறந்தவெளி எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், கூச்சிங்கில் 15 சம்பவங்களும், மிரியில் 11 சம்பவங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தாலும், பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புகை மாசுபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News