Mar 24, 2026
Thisaigal NewsYouTube
மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5G தொடர்பு அலை 81.7% அடைவு – தியோ
தற்போதைய செய்திகள்

மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5G தொடர்பு அலை 81.7% அடைவு – தியோ

Share:

கோலாலம்பூர், ஜூலை 4-

நாடு முழுவதும் இதுவரை 7,114 5G தளங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்கள் தொகை நிறைந்த பகுதிகளில் 5G தொடர்பு அலையின் சேவை தற்போது 81.7 விழுக்காட்டை எட்டியுள்ளாதாக என்று தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு, 5G சேவைக்கான கட்டுமானப் பணிகள் அதிக பொருளாதார நடவடிக்கைகள் கொண்ட நகர்ப்புறங்களில் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் கிராமப்புறங்கள் உட்பட பிற பகுதிகளுக்கும் அதன் விரிவாக்கம் தொடங்கியுள்ளது.

"கோலாலம்பூரில் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5G தொடர்பு அலை 97.7 விழுக்காடாகவும், புத்ராஜெயாவில் , 97.3 விழுக்காடாகவும், சிலாங்கூரில் 96.1 விழுக்காடாகவும், ஜோகூரில் 83.1 விழுக்காடாகவும், மலாக்காவில் 88.6 விழுக்காடாகவும், நெகிரி செம்பிலானில் 77.5 விழுக்காடாகவும், பினாங்கில் 91.1 விழுக்காடாகவும் மற்றும் பேராவில் 79.8 விழுக்காடாகவும் உள்ளது என்று மேலவையில் Teo கூறினார்

Related News