மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் கமாண்டர் சுடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 25 முதல் 28-ஆம் தேதிகளில் குபாங் பாசு பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள 10 பேரில் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், 3 மலேசியர்களும் உள்ளதாகவும் அட்ஸ்லி அபு குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் ஒரு சந்தேகநபர் போதைப் பொருள் பயன்படுத்துவது உறுதியாகியுள்ள நிலையில், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அட்ஸ்லி அபு நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








