கோலாலம்பூர், ஜூன்.23-
அடுத்த ஆண்டு கிளந்தான், தும்பாட்டிற்கும், சிலாங்கூர், கோலக் கிள்ளானுக்கும் இடையில் இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரை விரைவு ரயில் சேவை தொடங்கவிருக்கும் வேளையில் ரயில் இருப்புப்பாதை அருகில் பாயும் கேபள் கம்பிகள் திருட்டுச் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ரயில் இருப்புப்பாதைகள் அருகில் பாயும் கேபள்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்குமானால், ரயில் சேவைகள் குறிப்பாக காடுகள், மலைகள், நதிகள் என கடக்கும் இசிஆர்எல் ரயில் சேவைகள் வெகுவாக பாதிக்கும் என்று மலேசியா ரேயில் லின்க் சென்டிரியான் பெர்ஹாட் அறிவித்துள்ளது.








