பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசங்கத்தை கவிழ்ப்பதற்கு முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் துபாய் நகர்வு குறித்து எதிர்க்கட்சியினருக்கு எதுவும் தெரியாது என்று பெரிக்காத்தன் நேஷனல் பொதுச் செயலாளர் Datuk Seri Hamza Zainiddin தெரிவித்துள்ளார்.
துபாய் நகர்வு, குறிப்பிட்ட தரப்பினரால் வேண்டுமேன்றே உருவாக்கப்பட்ட கட்டுக்கதையாகும். இப்படியொரு தகவலை பகிர்வதால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான ஹம்சா ஸைனுதீன் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினருக்கு போதிய ஆதரவு இல்லை என்று யார் பதில் அளித்தது, இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும்படி யார் முதலில் கேட்டுக்கொண்டது என்று ஹம்ஸா ஜைனுதீன் வினவினார்.








