Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சந்தேக நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

சந்தேக நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

Share:

டிச. 29-

குழந்தைகள் ஆபாச நடவடிக்கைகளில் தொடர்புடைய எஞ்சிய சந்தேக நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல் படைத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்

அசல் 'இலக்கின்படி' 18 நபர்கள் இருப்பதாகவும் தமது தரப்பு 13 பேரைக் கைது செய்து விட்டதாகவும் குறிய அவர், இன்னும் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுவதாகத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், குழந்தைகள் ஆபாசப் பொருட்களை வைத்திருப்பது குற்றம் என்று தெரியாது எனக் கூறியுள்ளனர். இது போன்ற குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதைக் காட்டுகிறது என்றார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் சிலாங்கூர், பேரா, பினாங்கு, ஜோகூர் போன்ற மாநிலங்கள் அடங்கும். மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் இணைந்து மேலும் பல மாநிலங்களுக்கும் இந்த நடவடிக்கை விரிவடையும் என அயூப் கான் குறிப்பிட்டார்.

சமீபத்தில், ஆறு மாநிலங்களில் குழந்தைகள் ஆபாச - பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய பொருட்களை ஆன்லைனில் வைத்திருந்ததற்காக 13 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இது போன்ற குற்றங்களை ஒழிக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்