May 27, 2026
Thisaigal NewsYouTube
சந்தேக நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

சந்தேக நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

Share:

டிச. 29-

குழந்தைகள் ஆபாச நடவடிக்கைகளில் தொடர்புடைய எஞ்சிய சந்தேக நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல் படைத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்

அசல் 'இலக்கின்படி' 18 நபர்கள் இருப்பதாகவும் தமது தரப்பு 13 பேரைக் கைது செய்து விட்டதாகவும் குறிய அவர், இன்னும் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுவதாகத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், குழந்தைகள் ஆபாசப் பொருட்களை வைத்திருப்பது குற்றம் என்று தெரியாது எனக் கூறியுள்ளனர். இது போன்ற குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதைக் காட்டுகிறது என்றார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் சிலாங்கூர், பேரா, பினாங்கு, ஜோகூர் போன்ற மாநிலங்கள் அடங்கும். மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் இணைந்து மேலும் பல மாநிலங்களுக்கும் இந்த நடவடிக்கை விரிவடையும் என அயூப் கான் குறிப்பிட்டார்.

சமீபத்தில், ஆறு மாநிலங்களில் குழந்தைகள் ஆபாச - பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய பொருட்களை ஆன்லைனில் வைத்திருந்ததற்காக 13 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இது போன்ற குற்றங்களை ஒழிக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு