சபா, ஜூன் 22-
சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வேன் மீது மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் அந்த வேனை செலுத்திய போலீஸ் கார்போரல் உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்றிரவ, சபா, லஹாட் டத்து, பெல்டா நிலக்குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்தது.
போலீஸ் வேனின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 44 வயது போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் துல்பஹாரின் இஸ்மாயில் தெரிவித்தார்.
பந்தாய் சஹாபத் 16 கடலோரப்பகுதியில் பொது செயலாக்கப் பணிக்காக அந்த போலீஸ்காரர் வேனில் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.








