Jan 21, 2026
Thisaigal NewsYouTube
இற்றுப்போன அரசியலுக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது
தற்போதைய செய்திகள்

இற்றுப்போன அரசியலுக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது

Share:

இனம் அல்லது சமயத்தின் பெயரால் நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் இற்றுப் போன அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் நேரம் கனிந்து விட்டதாக மூடா கட்சியின் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.
மலேசியாவை அதன் பெயர் மற்றும் உரிமையிலிருந்து மாற்றுவதற்கு மலாய்க்காரர் அல்லாதவர்கள் சில முயற்சி செய்வதாக இனவாதத்தை தூண்டும் தன்மையில் அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தமது நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவை சேர்ந்த அனைத்து இனத்தவர்களும், சமயத்தவர்களும் இந்த நாட்டை நேசிக்கின்றனர். மலேசியாவையோ அல்லது தானா மெலாயூ என்ற பெயரையோ மாற்றுவதற்கு யாரும் முய்றசி செய்வதாக இல்லை. ஆனால், துன் மகாதீர் போன்று இனம் மற்றும் சமயத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்த முற்படும் காலாவதியான, இற்றுப் போன அரசியல் போக்குடைவர்களின் வாதத்தை மக்கள் முற்றாக புறந்தள்ள வேண்டும் என்று மூவார் எம்.பி.யுமான சையிட் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்