இனம் அல்லது சமயத்தின் பெயரால் நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் இற்றுப் போன அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் நேரம் கனிந்து விட்டதாக மூடா கட்சியின் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.
மலேசியாவை அதன் பெயர் மற்றும் உரிமையிலிருந்து மாற்றுவதற்கு மலாய்க்காரர் அல்லாதவர்கள் சில முயற்சி செய்வதாக இனவாதத்தை தூண்டும் தன்மையில் அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தமது நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவை சேர்ந்த அனைத்து இனத்தவர்களும், சமயத்தவர்களும் இந்த நாட்டை நேசிக்கின்றனர். மலேசியாவையோ அல்லது தானா மெலாயூ என்ற பெயரையோ மாற்றுவதற்கு யாரும் முய்றசி செய்வதாக இல்லை. ஆனால், துன் மகாதீர் போன்று இனம் மற்றும் சமயத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்த முற்படும் காலாவதியான, இற்றுப் போன அரசியல் போக்குடைவர்களின் வாதத்தை மக்கள் முற்றாக புறந்தள்ள வேண்டும் என்று மூவார் எம்.பி.யுமான சையிட் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


