Mar 21, 2026
Thisaigal NewsYouTube
விவசாயிகளுக்குக் கூடுதல் மானியம்: புடி 95 திட்டத்தில் திருத்தம்!
தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்குக் கூடுதல் மானியம்: புடி 95 திட்டத்தில் திருத்தம்!

Share:

தாசெக் கெலுகோர், செப்டம்பர்.28-

புதிய புடி 95 பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 300 லிட்டர் பெட்ரோல் போதுமானதாக இல்லை என்ற புகாரைத் தொடர்ந்து, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. விவசாயப் பணிகளுக்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதால், நிதி அமைச்சுடன் இணைந்து அவர்களுக்குச் சிறந்த தீர்வைக் காண அமைச்சு தீவிரமாகப் பேசி வருகிறது எனத் தெரிவித்தார் அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு. விரைவில், விவசாயிகளுக்குச் சலுகைகள் வேறு வழிகளில் வழங்கப்படும் அல்லது மானிய அளவு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை விவசாயிகளின் உற்பத்தித் திறனைப் பாதுகாக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து