கோலாலம்பூர், ஜன. 18-
வரும் சீனப்புத்தாண்டின் போது, சாலைகளை பயன்படுத்துவதற்கு சரக்கு வாகனங்களுக்கு 4 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளன.
சீனப்புத்தாண்டுக்கு முன்பு, ஜனவரி 27,28 ஆகிய தேதிகளிலும், சீனப்புத்தாண்டுக்குப் பிறகு பிப்ரவரி முதல் தேதி மற்றும் 2 ஆம் தேதிகளிலும் இந்த தடை அமலில் இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
சீனப்புத்தாண்டையொட்டி நீண்ட விடுமுறையை கழிப்பதற்கு பலர் தங்கள் கிராமங்களுக்கு செல்லக்கூடும். இதனால், வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சரக்கு வாகனங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.







