சாலையில் ஏற்பட்டக் குழிகளை தனது சொந்த முயற்சியில் மூடிய ஆடவர் ஒருவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். பாதுகாப்பு கருதியும் விபத்து ஏதும் நேராமல் இருப்பதற்கும் அவர் அவ்வாறு செய்ததாக சமூக ஊடகங்களில் அவரது புகைப்படம் வைரலானது.
சிரம்பான், பல்ம் மோல்க்கு எதிரே இருக்கும் அந்தச் சாலையில் ஏற்பட்டக் குழிகள் பல காலமாக அப்படியே இருந்துள்ளன.
அவரது சொந்த செலவில் தாமே அந்தக் குழிகளை மூடிய அவரது செயல் பலரின் பாராட்டைப் பெற்றது.
அதே சமயம், பொறுப்பில் உள்ளவர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வியையும் அந்தப் படத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது.








