மலேசிய மக்கள் நீண்டகாலமாகவே 'யார் பிரபலம்' என்ற அரசியலில் சிக்கியுள்ளார்களே தவிர 'யார் திறமையானவர்' என்பதில் அல்ல" என்று மூடா கட்சியின் தேசிய உதவித் தலைவர் டாக்டர் ஆர். சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மூடா கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சிவபிரகாஷ், , ஒரு 'சூப்பர் ஹீரோவை' நம்பி நாடு இருக்கக் கூடாது என்றும், வலுவான அமைப்பும் தகுதியான குழுவுமே நாட்டுக்குத் தேவை என்றும் கூறினார்.
பிரான்ஸ் நாட்டின் இம்மானுவேல் மேக்ரான் , இந்தியாவின் ஆம் ஆத்மி மற்றும் அண்மையில் தமிழகத்தில் ஆட்சியமைத்த தவெக போன்ற புதிய கட்சிகளை மக்கள் மாற்றத்திற்காகத் தேர்ந்தெடுத்ததை டாக்டர் சிவபிரகாஷ் உதாரணமாகக் சுட்டிக்காட்டினார்.
"பழைய கட்சிகளால் ஊழல் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வை இன்னும் தீர்க்க முடியவில்லை. வயது, திறமையைத் தீர்மானிப்பதில்லை. மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திருப்பவே அரசாங்கம் 'பிரதமர் வேட்பாளர் யார்?' என்ற கேள்வியை எழுப்புகிறது" என்று கூறிய டாக்டர் சிவபிரகாஷ் , மூடா கட்சி ஒரு தனிநபரைத் தாண்டி புதிய தலைமுறையை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.








