Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் 5ஜி தொடர்பு அலையின் சேவை இவ்வாண்டு இறுதிக்குள் 80 விழுக்காட்டிற்கு மேல் அடையும் – தியோ
தற்போதைய செய்திகள்

பினாங்கில் 5ஜி தொடர்பு அலையின் சேவை இவ்வாண்டு இறுதிக்குள் 80 விழுக்காட்டிற்கு மேல் அடையும் – தியோ

Share:

பினாங்கில் உள்ள 5ஜி தொடர்பு அலை இவ்வாண்டு இறுதிக்குள் அனைத்து தகவல் தொடர்பு உள்கட்டமைப்புக்கான பணிகள் முடிந்தப் பிறகு, மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 80 விழுக்காட்டை விட கூடுதலாக எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பினாங்கில் 470 5ஜி கோபுரங்களை அமைக்க தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு இலக்கு கொண்டுள்ளதாகவும், அவ்வெண்ணிக்கையில் இதுவரை 290 கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் துணை அமைச்சர் தியோ நீ சிங்
தெரிவித்தார்.

பினாங்கில் மொத்தம் 244 5ஜி கோபுரங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன, மேலும் அம்மாநிலத்தில் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5ஜி தொடர்பு அலை சேவை 67.7 விழுக்காடு எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

"இதுவரை 64.7 விழுக்காடாக உள்ள நாட்டின் மொத்த சராசரி 5ஜி தொடர்பு அலை சேவையில், பினாங்கு மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 80 விழுக்காட்டை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் பினாங்கு அதன் 5ஜி தொடர்பு அலை சேவையில் 80 விழுக்காட்டைத் தாண்டும்" என்று செய்தியாளர்களிடம் தியோ நீ சிங் கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 80 விழுக்காடு 5ஜி தொடர்பு அலையின் இலக்கை எட்டுவதை உறுதிசெய்ய, டிஜிட்டல் நேஷனல் நிறுவனம் உடன் அமைச்சு இணைந்து செயல்படுவதாகக் கூறினார்.

முன்னதாக, பினாங்க, பகான் நாடாளுமன்றத்தில் மெர்டேக்கா என்ற சமூகத் திட்டத்தை தியோ நீ சிங் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாகன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கும் கலந்து கொண்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!