Jan 23, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்
தற்போதைய செய்திகள்

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

Share:

பாங்கி, ஜனவரி.23-

சிலாங்கூர் மாநிலத்தின் பன்றி வளர்ப்புத் தொழிலை புக்கிட் தாகார் பகுதியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தைச் சிலாங்கூர் அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக "மிகப் பொருத்தமான" வேறொரு இடத்தை பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பன்றி வளர்ப்புத் தொழிலை ஒருங்கிணைக்கும் திட்டம் மற்றும் அது குறித்து அப்பகுதி மக்கள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

இன்று பாங்கியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், "சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் குடியிருப்பாளர்களின் அச்சம் ஆகிய விவகாரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இது குறித்து தாம் சிலாங்கூர் மந்திரி பெசாருடன் கலந்து ஆலோசிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

உலு சிலாங்கூர் பகுதியில் பன்றி வளர்ப்புத் தொழிலை ஒருங்கிணைக்கும் மாநில அரசின் திட்டத்திற்குத் தமது எதிர்ப்பை சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்கள் ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம்  - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு