கோலாலம்பூர்,ஜூலை 13-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் - KLIA அருகேயுள்ள வளைவில் நிகழ்ந்த விபத்தில், மோட்டார்சைக்கிளிலிருந்து கீழே விழுந்த பெண், கொள்கலன் லாரியின் சக்கரத்தில் சிக்கினார்.
சுமார் 80 மீட்டர் தூரம் வரையில் இழுத்துச்செல்லப்பட்ட அவர், படுகாயங்களுக்கு இலக்கானார்.
நேற்று மாலை மணி 3.22 அளவில் பெறப்பட்ட அவசர அழைப்பை அடுத்து, நிகழ்விடத்தை வந்தடைந்த தீயணைப்பு மீட்பு படையினர், அப்பெண்ணை உயிருடன் மீட்டனர்.
அவருடன் பயணித்த மற்றொரு பெண் சிராய்ப்பு காயங்களுக்கு ஆளான வேளை, 25 மற்றும் 39 வயதுடைய அவ்விருவரும் சைபர்ஜெயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.








