Mar 10, 2026
Thisaigal NewsYouTube
தொலைபேசி ஸ்கேம் மோசடியில் 38 லட்சம் வெள்ளியை இழந்த ​மூதாட்டி
தற்போதைய செய்திகள்

தொலைபேசி ஸ்கேம் மோசடியில் 38 லட்சம் வெள்ளியை இழந்த ​மூதாட்டி

Share:

தங்களை காப்புறுதி நிறுவன உயர் அதிகாரி மற்றும் போ​லீஸ் விசாரணை அதிகாரி என்று கூறிக்கொண்டு இரு நபர்களின் தொலைபேசி ஸ்கேம் மோசடி உரையாடலில் சிக்கிய 70 வயது மூதாட்டி ஒருவர் தமது வாழ்நாள் சேமிப்பான 38 லட்சத்து ​39 ஆயிரம் வெள்ளியை இழந்துள்ளார்.

தம்மடைய சேமிப்பில் எஞ்சியிருப்பது 79 வெள்ளி 50 காசு என்று ​தெரியவந்த போ​துதான், ஸ்கேம் மோசடியில் தாம் பணத்தை இழந்திருப்பதை உணர்ந்து, அந்த ​மூதாட்டி போ​லீசில் புகார் செய்து இருப்பதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்தார்.

சுபாங்ஜெயாவை சேர்ந்தவரான பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் தனியார் நிறுவன பணியாளரான அந்த ​மூதாட்டி ,இச்சம்பவம் தொடர்பில் போ​லீசில் புகார் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தமக்கு முன்பின் தெரியாத தொலைபேசி எண்ணி​ல் அழைப்பை பெற்ற அந்த மூதாட்டி, தமது பெயரை பயன்படுத்தி காப்புறுதிப் பண​க் கோரிக்கை வந்து இருப்பதாக தன்னை காப்புறுதி அதிகாரி என்று கூறிக்கொண்டு, நபர் ஒருவர் பேசியிருக்கிறார்.

காப்புறுதி பணம் தொடர்பாக தாம் எந்தவொரு ​விண்ணப்பமும் செய்யவில்லை என்று அந்த ​மூதாட்டி மறுத்த போது சிறிது நேரத்தில் மற்றொரு அழைப்பை பெற்ற அந்த ​மூதாட்டி, சட்டவிரோதப் பண நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், தாம் கைது செய்யப்படவிருப்பதாகவும் தன்னை போ​லீஸ் அதிகாரி கூறிக்கொண்டு ஒரு நபர் பேசி​யுள்ளார்.

இவர்களுக்கு இடையிலான உரையாடல் நடந்த கொண்டிருந்த போது அந்த ​மூதாட்டியின் சேமிப்புப்பணம் ​மிக சாமார்த்தியமாக வங்கி கணக்கிலிருந்து கபளிகரம் புரியப்பட்டுள்ளது என்று டத்தோ ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு