Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பேரணி தொடர்பில் பெர்சத்து தலைவர் கைது
தற்போதைய செய்திகள்

பேரணி தொடர்பில் பெர்சத்து தலைவர் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.28-

கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணி தொடர்பில் பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பட்ருல் ஹிஷாம் ஷாஹரின் என்ற செகுபார்டைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் செகுபார்ட், அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதை அவரின் வழக்கறிஞர் ராஃபிக் ரஷிட் அலி உறுதிச் செய்துள்ளார்.

செகுபார்ட் நாளை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் இன்று பிற்பகலில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவரான செகுபார்ட் கைது செய்யப்பட்டதற்கானக் காரணங்கள் தெரியவில்லை. ஆனால், அந்தப் பேரணியின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உருவப் படத்தைப் பிரம்பினால் அடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக செகுபார்ட் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது