Mar 6, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்  நிலையம் மீது தாக்குதல் நடத்தச் சதி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 6 இளைஞர்கள் கைது
தற்போதைய செய்திகள்

போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தச் சதி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 6 இளைஞர்கள் கைது

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 16 முதல் 21 வயதுடைய ஆறு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில் இவர்கள் சிக்கியதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூர், கெடா மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அறுவரில் மூவர் 18 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

இவர்கள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக ஐஎஸ் தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்புதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தவிர போலீஸ் நிலையங்கள், அரசு வசதிகள் மற்றும் பொது இடங்களைத் தாக்குவதற்கு இவர்கள் ரகசியமாகத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

இவர்களிடமிருந்து 11 கைபேசிகள், 2 மடிக்கணினிகள், ஐஎஸ் அமைப்பின் 4 கொடிகள் மற்றும் தீவிரவாதக் கருத்துக்கள் கொண்ட 3 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காலிட் இஸ்மாயில் மேலும் கூறினார்.

Related News

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கெவின் மொரைஸ் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ மருத்துவ அதிகாரியின் மறுஆய்வு மனு ஜூலை 31-இல் விசாரணை

கெவின் மொரைஸ் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ மருத்துவ அதிகாரியின் மறுஆய்வு மனு ஜூலை 31-இல் விசாரணை

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை, கோயில் வளாகத்தின் முன் சட்டவிரோதப் போராட்டமா? பினாங்கு போலீசார் கடும் எச்சரிக்கை

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை, கோயில் வளாகத்தின் முன் சட்டவிரோதப் போராட்டமா? பினாங்கு போலீசார் கடும் எச்சரிக்கை

போலீஸ் விசாரணையைத் தடுக்க டையிம் ஸைனுடின் குடும்பத்தினர் வழக்கு

போலீஸ் விசாரணையைத் தடுக்க டையிம் ஸைனுடின் குடும்பத்தினர் வழக்கு

துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு

துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு

நாட்டின் நிலைத்தன்மைக்குச் சதி: மூவரிடம் வாக்குமூலம் பதிவு

நாட்டின் நிலைத்தன்மைக்குச் சதி: மூவரிடம் வாக்குமூலம் பதிவு