ஜன.10-
பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவது அரசின் கடமை என்றும், சிரமப்படும் மக்களுக்கு உதவுவதால் எந்த அரசும் வீழ்ச்சியடையாது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். மாறாக, பொறாமை, அடக்குமுறை , பொது நிதியை கொள்ளையடிப்பது போன்ற காரணிகளால்தான் அரசுகள் வீழ்ச்சியடைகின்றன என்றார். பொதுச் சேவைத் துறை ஊழியர்களில் B40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் அவர்கள் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.
மேலும், விமர்சகர்கள் நாட்டின் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அற்ப விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முக்கிய நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பழிவாங்கலால் எடுக்கப்படவில்லை என்றும், திருடப்பட்ட நிதியை மக்களுக்கு திருப்பி கொடுக்கும் நோக்கத்துடன் தான் எடுக்கப்படுகிறது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.







