Aug 3, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா - தாய்லாந்து எல்லையில் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

மலேசியா - தாய்லாந்து எல்லையில் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Share:

தாய்லாந்தின் Tak Bai பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு தாய்லாந்து போலீசார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மலேசியா–தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து Narathiwat மாநில போலீஸ் தளபதி Major General Prayong Kotsakha கூறுகையில், போலீசார், ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சந்தேக நபர் மலேசியா வழியாக தப்பிச் செல்லாத வகையில் எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், Pengkalan Kubor அருகே உள்ள Golok River பகுதியில் எல்லை தாண்டும் மக்கள் மற்றும் படகுகளின் போக்குவரத்து வழக்கம் போல நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News