Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

Share:

ஈப்போ, ஜனவரி.19-

பங்கோர் தீவில், ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவானைச் சேர்ந்த 72 வயதான பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இச்சம்பவமானது நேற்று மதியம் 12.30 மணியளவில் நடந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பூலாவ் கியாம் பகுதியில் தனது குடும்பத்தினருடன் அவர் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி விட்டதாகக் கூறப்படுகின்றது.

இச்சம்பவமானது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று சவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஸ்கோர்கெலிங் என்பது ஒரு நீர் விளையாட்டு ஆகும். இதன் மூலம், முகமூடி மற்றும் ஸ்னோர்கெல் எனப்படும் சுவாசக் குழாயைப் பயன்படுத்தி, நீரின் மேற்பரப்பில் நீந்தியபடி, நீருக்கடியில் உள்ள உயிரினங்களைக் கவனிக்க முடியும்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு