Jul 31, 2026
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ அன்வார் முற்றிலும் மாற்றப்பட்டவர்
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ அன்வார் முற்றிலும் மாற்றப்பட்டவர்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இதற்கு முன்பு இருந்த மூன்று பிரதமர்களுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுப்பட்டவர் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை நாட்டின் துணைப்பிரதமராக பொறுப்பு வகித்து வரும் தம்மால் இதனை அணுக்கமாக கண்காணிக்க முடிகிறது என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

பிரதமர் அன்வாருக்கு மக்கள் தொடர்ந்து பிளவுப்படாத ஆதரவை தரும் அதேவேளையில் அவருடன் இணைந்து பணியற்றும் அமைச்சர்களும் ஒரு குழுவாக மிக உற்சாகத்துடன் தங்கள் கடமையை நிறைவேற்றி வருவார்களேயானால் இறைவன் அருளில் அடுத்த நான்கு ஆண்டுகள் நாடு ஒரு சிறப்பான நிலையைக் காண முடியும் என்று பாரிசான் நேஷனல் தலைவருமான அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

புக்கிட் ஜாலிலில் இன்று ஒற்றுமை அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான அகமட் ஜாஹிட் இதனை குறிப்பிட்டார்.

Related News