Apr 4, 2026
Thisaigal NewsYouTube
மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்
தற்போதைய செய்திகள்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

Share:

முன்னாள் போக்குவரத்து அமைச்சரும், மசீச முன்னாள் தேசியத் தலைவருமான துன் டாக்டர் லிங் லியோங் சிக், மறைவிற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 82 வயதான துன் லிங், நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவராகவும் போற்றப்பட்டவர் என்று பிரதமர் புகழாஞ்சலி சூட்டினார்.

துன் டாக்டர் லிங்கின் மறைவு குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள பிரதமர், "துன் டாக்டர் லிங்கின் சேவைகளும் பங்களிப்புகளும் நாட்டிற்கு அளப்பரியவை; அவை எப்போதும் நினைவுகூரப்படும் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகமாக அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் நீண்ட காலம் பணியாற்றிய ஒரு முதுபெரும் அரசியல்வாதியை நாடு இழந்துவிட்டதாகவும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related News

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு