May 6, 2026
Thisaigal NewsYouTube
இணைய பாதுகாப்புச் சட்டமானது பயனர்களைப் பாதுகாக்குமே தவிர சுதந்திரத்தைப் பறிக்காது - எம்சிஎம்சி உறுதி
தற்போதைய செய்திகள்

இணைய பாதுகாப்புச் சட்டமானது பயனர்களைப் பாதுகாக்குமே தவிர சுதந்திரத்தைப் பறிக்காது - எம்சிஎம்சி உறுதி

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.15-

அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025-ஆனது சமூக ஊடகப் பயனர்களின் பாதுகாப்பினை உறுதிச் செய்யுமே தவிர, அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்காது என எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இச்சட்டமானது அனுமதிப்பதாக எம்சிஎம்சியின் மேம்பாட்டுக்கான துணை இயக்குநர் எனேங் ஃபாரிடா இஸ்கண்டார் தெரிவித்துள்ளார்.

நடைமுறையிலுள்ள சட்டமானது, சமூக ஊடகங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் பகிரும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மட்டுமே அனுமதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைச் சமூக ஊடகங்களில் பகிர அனுமதித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதனைப் பகிர்ந்த தனிநபர் என இருவர் மீதும் புகார் அளிக்க இந்தச் சட்டமானது வழிவகை செய்கின்றது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சமூக ஊடகமானது, அப்புகார்கள் தொடர்பாக நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றது.

அதே வேளையில், சமூக ஊடகமானது, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை உடனடியாக அகற்றத் தேவையான முறைகள் பற்றியும் பயனர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் எனேங் ஃபாரிடா இஸ்கண்டார் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 22 -ஆம் தேதி வரையறுக்கப்பட்ட இந்த இணையப் பாதுகாப்பு சட்டம் 2025-ஆனது, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்