Dec 15, 2025
Thisaigal NewsYouTube
இணைய பாதுகாப்புச் சட்டமானது பயனர்களைப் பாதுகாக்குமே தவிர சுதந்திரத்தைப் பறிக்காது - எம்சிஎம்சி உறுதி
தற்போதைய செய்திகள்

இணைய பாதுகாப்புச் சட்டமானது பயனர்களைப் பாதுகாக்குமே தவிர சுதந்திரத்தைப் பறிக்காது - எம்சிஎம்சி உறுதி

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.15-

அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025-ஆனது சமூக ஊடகப் பயனர்களின் பாதுகாப்பினை உறுதிச் செய்யுமே தவிர, அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்காது என எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இச்சட்டமானது அனுமதிப்பதாக எம்சிஎம்சியின் மேம்பாட்டுக்கான துணை இயக்குநர் எனேங் ஃபாரிடா இஸ்கண்டார் தெரிவித்துள்ளார்.

நடைமுறையிலுள்ள சட்டமானது, சமூக ஊடகங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் பகிரும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மட்டுமே அனுமதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைச் சமூக ஊடகங்களில் பகிர அனுமதித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதனைப் பகிர்ந்த தனிநபர் என இருவர் மீதும் புகார் அளிக்க இந்தச் சட்டமானது வழிவகை செய்கின்றது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சமூக ஊடகமானது, அப்புகார்கள் தொடர்பாக நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றது.

அதே வேளையில், சமூக ஊடகமானது, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை உடனடியாக அகற்றத் தேவையான முறைகள் பற்றியும் பயனர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் எனேங் ஃபாரிடா இஸ்கண்டார் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 22 -ஆம் தேதி வரையறுக்கப்பட்ட இந்த இணையப் பாதுகாப்பு சட்டம் 2025-ஆனது, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

மலாக்கா போலீஸ் தலைவர் வெளியிட்டது பொய்யான அறிக்கையாகும்: புதிய ஆதாரங்களுடன் வாதிட்டடார் அருண் துரைசாமி

மலாக்கா போலீஸ் தலைவர் வெளியிட்டது பொய்யான அறிக்கையாகும்: புதிய ஆதாரங்களுடன் வாதிட்டடார் அருண் துரைசாமி

மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் விடுப்பில் அனுப்பப்பட வேண்டும்

மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் விடுப்பில் அனுப்பப்பட வேண்டும்

விபத்தில் இளைஞருக்கு மரணம் விளைவித்ததாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

விபத்தில் இளைஞருக்கு மரணம் விளைவித்ததாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

வர்த்தகர் ஆல்பெர்ட் தே துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டாரா? விசாரணையைத் தொடங்கியது போலீஸ் துறை

வர்த்தகர் ஆல்பெர்ட் தே துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டாரா? விசாரணையைத் தொடங்கியது போலீஸ் துறை

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: புக்கிட் அமான் சி.ஐ.டி. தலைவர் டத்தோ குமாரிடமிருந்து கைநழுவியதா?

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: புக்கிட் அமான் சி.ஐ.டி. தலைவர் டத்தோ குமாரிடமிருந்து கைநழுவியதா?

 "சாலைத் தடுப்பான்கள் அலங்காரத்திற்காக அல்ல; பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக" - டிபிகேஎல் வலியுறுத்து

"சாலைத் தடுப்பான்கள் அலங்காரத்திற்காக அல்ல; பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக" - டிபிகேஎல் வலியுறுத்து