May 6, 2026
Thisaigal NewsYouTube
கருணை நிதி உயர்த்தப்படுவது: அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்வேன்
தற்போதைய செய்திகள்

கருணை நிதி உயர்த்தப்படுவது: அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்வேன்

Share:

குவாந்தான், டிசம்பர்.18-

இந்த டிசம்பர் மாதத்தில் நாட்டில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொருளாதாரக் கருணை நிதியான பந்துவான் வாங் இஹ்சான் தொகையை உயர்த்துவது குறித்து அமைச்சரவையில் பரிந்துரைக்கப் போவதாக துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் ஏற்படும் சேதங்கள் மற்றும் மக்களின் தற்போதையப் பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு, இந்த நிதியை அதிகரிப்பதற்கான பரிந்துரையை வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான NADMA ( நட்மா ) தலைவரான அஹ்மாட் ஸாஹிட், வெள்ள நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நிதியுதவிகள் விரைவாகச் சென்றடைவதை உறுதிச் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மக்களின் துயரத்தைக் குறைக்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாக துணைப்பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்