Mar 16, 2026
Thisaigal NewsYouTube
Rahmah உதவித் தொகை ஆயிரத்து 200 வெள்ளியாக அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

Rahmah உதவித் தொகை ஆயிரத்து 200 வெள்ளியாக அதிகரிப்பு

Share:

MADANI அரசாங்கத்தின் SARA எனப்படும் Rahmah உதவித் தொகை கடந்த ஆண்டு 600 வெள்ளியாக இருந்த நிலையில், இவ்வாண்டு அது ஆயிரத்து 200 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களுக்கான உதவித் தொகை ஆயிரத்து 200 வெள்ளியாகவும் திருமணம் ஆகாத தனிநபர்களுக்கு 600 வெள்ளி உதவித் தொகை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 22 ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக Rahmah உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, அடிப்படை உணவுப் பொருட்களை மட்டும் வாங்கக்கூடியதாக நடப்பில் இருந்த இந்த Rahmah உதவித் தொகை, உடல் சுத்தம், மருந்துகள், பள்ளி உபகரணப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கவும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதி பெற்றவர்கள், தங்களின் மைகாட் கொண்டு அருகில் உள்ள தேர்தெடுக்கப்பட்ட கடைகளில் இப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த ஆதரவைக் கருத்தில் கொண்டு , அடிப்படைப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் கடைகளின் எண்ணிக்கை 515 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்