மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் கைது செய்யப்பட்டுள்ள தமது 2 அதிகாரிகள் உட்பட மூவரை மனித வள அமைச்சர் வி. சிவகுமார் இடை நீக்கம் செய்துள்ளார்.
இதில் சிவகுமாரின் அரசியல் அந்தரங்க செயலாளரான மகேஸ்வரியும் அடங்குவார். அந்த மூவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதை மனித வள அமைச்சின் தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன. எனினும் அந்த மூவர் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் விளக்கப்படவில்லை. மனித வள அமைச்சரின் நம்பிக்கைக்குரியவர்கள் என்று நம்பப்படும் அந்த மூன்று அதிகாரிகளின் பெயர்களும் மனித வள அமைச்சரின் சிறப்பு அதிகாரிகள் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சில் எஸ்.பி.ஆர்.எம். விரித்துள்ள விசாரணை வலையில் நாளை திங்கட்கிழமை மேலும் சிலர் பிடிப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


