மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் கைது செய்யப்பட்டுள்ள தமது 2 அதிகாரிகள் உட்பட மூவரை மனித வள அமைச்சர் வி. சிவகுமார் இடை நீக்கம் செய்துள்ளார்.
இதில் சிவகுமாரின் அரசியல் அந்தரங்க செயலாளரான மகேஸ்வரியும் அடங்குவார். அந்த மூவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதை மனித வள அமைச்சின் தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன. எனினும் அந்த மூவர் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் விளக்கப்படவில்லை. மனித வள அமைச்சரின் நம்பிக்கைக்குரியவர்கள் என்று நம்பப்படும் அந்த மூன்று அதிகாரிகளின் பெயர்களும் மனித வள அமைச்சரின் சிறப்பு அதிகாரிகள் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சில் எஸ்.பி.ஆர்.எம். விரித்துள்ள விசாரணை வலையில் நாளை திங்கட்கிழமை மேலும் சிலர் பிடிப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


