மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் கைது செய்யப்பட்டுள்ள தமது 2 அதிகாரிகள் உட்பட மூவரை மனித வள அமைச்சர் வி. சிவகுமார் இடை நீக்கம் செய்துள்ளார்.
இதில் சிவகுமாரின் அரசியல் அந்தரங்க செயலாளரான மகேஸ்வரியும் அடங்குவார். அந்த மூவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதை மனித வள அமைச்சின் தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன. எனினும் அந்த மூவர் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் விளக்கப்படவில்லை. மனித வள அமைச்சரின் நம்பிக்கைக்குரியவர்கள் என்று நம்பப்படும் அந்த மூன்று அதிகாரிகளின் பெயர்களும் மனித வள அமைச்சரின் சிறப்பு அதிகாரிகள் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சில் எஸ்.பி.ஆர்.எம். விரித்துள்ள விசாரணை வலையில் நாளை திங்கட்கிழமை மேலும் சிலர் பிடிப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


