Apr 30, 2026
Thisaigal NewsYouTube
 ஜோகூரில் 21 சட்டவிரோத குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் 21 சட்டவிரோத குடியேறிகள் கைது

Share:

ஜோகூர் மாநிலத்தில் உள்ள கட்டுமானத் தளங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 21 சட்டவிரோத குடியேறிகளை குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களின் புகாரை அடுத்து மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, அங்கிருந்த தற்காலிக குடியிருப்புகளில் தங்கியிருந்த 17 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் பிடிபட்டனர். இவர்களில் 17 பேர் இந்தோனேசியர்களாவும், 4 பேர் வங்காளதேசத்தவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முறையான பயண ஆவணங்கள் இல்லாதது மற்றும் விசா காலத்தை மீறி தங்கியிருந்தது போன்ற குற்றங்களுக்காக இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக செத்தியா துரோபிகா தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.

Related News