நெகிரி செம்பிலான்,ஆகஸ்ட் 04-
நெகிரி செம்பிலான், தெற்கு Ayer Kuning-இல் உள்ள வீடொன்றில் கருத்து வேறுபாடு காரணமாக, நண்பர் தாக்கியதில் 45 வயதான ஒருவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.
நண்பர் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்நபரின் நிலை குறித்து இன்று மாலை 3.30-க்கு தங்கள் தரப்பினருக்குப் பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக, Tampin மாவட்ட போலிஸ் தலைவர் Superintenden Amiruddien Sariman கூறினார்.
தோள்பட்டை, வயிறு, கால்கள், உடலின் பின்புறம் ஆகியவற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்ட அந்நபர் Tampin மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே வேலை விஷயங்களில் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக அத்தாக்குதல் நிகழ்ந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அச்சம்பவம் தொடர்பாக 31 வயதான நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இன்று தொடங்கி ஏழு நாள்களுக்கு தடுப்புக்காவலிடப்பட்டுள்ளார்.








