Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ரமலான் மாதத்தில் 'முஜாஹடா' உணர்வை நிலைநிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் அழைப்பு
தற்போதைய செய்திகள்

ரமலான் மாதத்தில் 'முஜாஹடா' உணர்வை நிலைநிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் அழைப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.18-

ரமலான் மாதத்தில் இபாடாக்கள் எனும் வழிபாடுகளை நிறைவேற்றுவதில் உள்ள உந்துதலானது 'முஜாஹடா' சீர்திருத்திக் கொள்ளும் முயற்சி எனும் உணர்வால் வழிநடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இந்த முஜாஹடா உணர்வு மறுமைக்கான இலக்குகளை அடைவதற்கு மட்டுமல்லாமல், சுய ஒழுக்கம், வேலையில் முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் அன்றாடப் பணிகளில் பொறுப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவுகிறது என்று கூறியுள்ளார்.

"எல்லாப் புகழும் இறைவனுக்கே! கண்ணியமிக்க, நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புனித ரமலான் மாதத்தை மீண்டும் அடையும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

ரமலான் மாதத்தின் நோன்பு கடமை மற்றும் இதர வழிபாடுகள் என்பது வெறும் நிபந்தனைகளையும் தூண்களையும் நிறைவேற்றுவது மட்டுமல்ல; மாறாக, புனிதமான இந்த விதிகளின் பின்னணியில் உள்ள ஞானத்தையும் நோக்கங்களையும் அடைவதே மிக முக்கியமானது," என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு