பாஸ் கட்சி தலைமையிலான மூன்று மாநிலங்களில் தமது ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்வை நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேவேளையில் இதர மாநிலங்களில் நடத்தப்படும் பொது உபசரிப்புகளிலும் பிரதமர் என்ற முறையில் தாம் கலந்து கொள்ளவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
சிலாங்கூர் உட்பட நிறைய மாநிலங்கள் ஹரிராயா பொது உபசரிப்பை நடத்தவிருப்பதால் அவற்றில் தாம் கலந்து சிறப்பிக்கவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியின் கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மூன்று மாநிலங்களில் தம்முடைய ஹரிராயா பொது உபசரிப்பை நடத்தவிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதைப் போல அவரை மறைமுகமாக சீண்டியுள்ள பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அமாட் ஃபட்டில் ஷாரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


