பாஸ் கட்சி தலைமையிலான மூன்று மாநிலங்களில் தமது ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்வை நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேவேளையில் இதர மாநிலங்களில் நடத்தப்படும் பொது உபசரிப்புகளிலும் பிரதமர் என்ற முறையில் தாம் கலந்து கொள்ளவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
சிலாங்கூர் உட்பட நிறைய மாநிலங்கள் ஹரிராயா பொது உபசரிப்பை நடத்தவிருப்பதால் அவற்றில் தாம் கலந்து சிறப்பிக்கவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியின் கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மூன்று மாநிலங்களில் தம்முடைய ஹரிராயா பொது உபசரிப்பை நடத்தவிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதைப் போல அவரை மறைமுகமாக சீண்டியுள்ள பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அமாட் ஃபட்டில் ஷாரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


