Apr 11, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்முறைப் பயிற்சி அளிப்பது வணிகச் செலவுகளை அதிகரிக்கலாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.26-

கல்லூரி , பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்முறைப் பயிற்சி அளிக்க நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் அரசின் புதிய கொள்கை, வணிகச் செலவுகளை அதிகரித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்தக்கூடும் என்று தொழில் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த கொள்கையின்படி, ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியருக்கும் மூன்று உள்ளூர் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இது மலேசியாவை வெளிநாட்டு முதலீடுகளுக்கு குறைவான கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் என்று MICCI எனப்படும் மலேசிய அனைத்துலக வர்த்தக, தொழில் சபையும் MEF எனப்படும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளன.

இந்த கொள்கை அடுத்தாண்டு ஜனவரி 1, முதல் முழுமையாக நடப்புக்கு வரும். சிறிய , நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த கொள்கை சவால்களை ஏற்படுத்தும் என்றும், பயிற்சி அளிப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட அரசு வழங்கும் வரி சலுகைகள் போதுமானதாக இருக்காது அவை கூறுகின்றன. வெளிநாட்டு வல்லுநர்களின் தேவை உள்ள தொழில்களுக்கு இந்த கொள்கை தடையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய பயிற்சித் திட்டம் சுமார் ஒரு இலட்சம் உள்ளூர் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Related News

ஆலயங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசம் கிடையாது:   டான்ஸ்ரீ நடராஜா திட்டவட்டம்

ஆலயங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசம் கிடையாது: டான்ஸ்ரீ நடராஜா திட்டவட்டம்

கெங் முன்சுங் மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பல் முறியடிப்பு: தலைவன் உட்பட 11 பேர் கைது

கெங் முன்சுங் மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பல் முறியடிப்பு: தலைவன் உட்பட 11 பேர் கைது

பந்திங்கில் 'Jobcare Selangor' வேலைவாய்ப்பு முகாம் மகத்தான் வரவேற்பு: ஆட்சிக்குழு உறுப்பினர் பாபாராய்டு பெருமிதம்

பந்திங்கில் 'Jobcare Selangor' வேலைவாய்ப்பு முகாம் மகத்தான் வரவேற்பு: ஆட்சிக்குழு உறுப்பினர் பாபாராய்டு பெருமிதம்

சபாவில் எரிபொருள் மானியம் மோசடி தடுப்பு நடவடிக்கை – மலேசியக் கடற்படையின் உதவி கோருகிறது அமைச்சு

சபாவில் எரிபொருள் மானியம் மோசடி தடுப்பு நடவடிக்கை – மலேசியக் கடற்படையின் உதவி கோருகிறது அமைச்சு

KLIA 2-இல் ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

KLIA 2-இல் ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

அடுத்த பொதுத்தேர்தலில் கெப்பாலா பத்தாஸ் தொகுதியில் போட்டியா? - கைரி திட்டவட்ட மறுப்பு

அடுத்த பொதுத்தேர்தலில் கெப்பாலா பத்தாஸ் தொகுதியில் போட்டியா? - கைரி திட்டவட்ட மறுப்பு