Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்முறைப் பயிற்சி அளிப்பது வணிகச் செலவுகளை அதிகரிக்கலாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.26-

கல்லூரி , பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்முறைப் பயிற்சி அளிக்க நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் அரசின் புதிய கொள்கை, வணிகச் செலவுகளை அதிகரித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்தக்கூடும் என்று தொழில் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த கொள்கையின்படி, ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியருக்கும் மூன்று உள்ளூர் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இது மலேசியாவை வெளிநாட்டு முதலீடுகளுக்கு குறைவான கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் என்று MICCI எனப்படும் மலேசிய அனைத்துலக வர்த்தக, தொழில் சபையும் MEF எனப்படும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளன.

இந்த கொள்கை அடுத்தாண்டு ஜனவரி 1, முதல் முழுமையாக நடப்புக்கு வரும். சிறிய , நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த கொள்கை சவால்களை ஏற்படுத்தும் என்றும், பயிற்சி அளிப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட அரசு வழங்கும் வரி சலுகைகள் போதுமானதாக இருக்காது அவை கூறுகின்றன. வெளிநாட்டு வல்லுநர்களின் தேவை உள்ள தொழில்களுக்கு இந்த கொள்கை தடையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய பயிற்சித் திட்டம் சுமார் ஒரு இலட்சம் உள்ளூர் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி