May 13, 2026
Thisaigal NewsYouTube
திடீர் வெள்ளம், பாதிப்புகளைக் குறைக்க மாநகர மன்றம் தீவிரத் திட்டம்
தற்போதைய செய்திகள்

திடீர் வெள்ளம், பாதிப்புகளைக் குறைக்க மாநகர மன்றம் தீவிரத் திட்டம்

Share:

கோலாலம்பூரின் பல பகுதிகளில் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில், வடிகால் அமைப்புகளை மேம்படுத்தி பாதிப்புகளைக் குறைக்க மாநகர மன்றம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சிகாம்புட் மற்றும் செராஸ் ஆகிய இடங்களில் நீரின் அளவைத் தாங்க முடியாமல் வடிகால்கள் நிரம்பி வழிந்ததால் திடீர் வெள்ளம் இந்த வெள்ளம் நடந்துளது.

மேம்பாட்டுத் திட்டங்களால் காடுகள் அழிக்கப்பட்டு மழைநீர் நேரடியாகச் சாலைகளுக்கு வருவதைக் குறைக்க, இனி சரிவான பகுதிகளில் கட்டடப் பணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் வேளையில், மழைநீரைச் சேமிக்கப் புதிய குளங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வானொலி மூலம் தினசரி வானிலை அறிவிப்புகளை வழங்கவும் மாநகர மன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News