இம்மாதம் 12 ஆம் தேதி 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பவர்கள் இந்திய வாக்காளர்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 132 சட்டமன்றத் தொகுதிகளில் 76 தொகுதிகளில் 10 விழுக்காட்டிற்கும் அதிகமாக இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த 76 தொகுதிகளில் உள்ள பத்து விழுக்காடு இந்தியர்களின் வாக்குகள்தான் 3 மாநிலங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகின்றன.
மலாய்க்காரர்களின் வாக்குகள் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் என பிளவுப்பட்டு, சிதறும் பட்சத்தில் வாக்களிப்பு தினத்தன்று மிக குறைந்த விழுக்காட்டு அளவிலேயே சீனர்கள் வாக்களிக்கலாம் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சியை செலுத்தப் போவது பக்காத்தான் ஹராப்பானா? பெரிக்காத்தான் நேஷனலா? என்பதை தீர்மானிக்கும் “கிங் மேக்கர்” ராக இந்தியர்கள் உள்ளனர் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் 37 லட்சம் வாக்காளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 13.9 விழுக்காடாகும். பினாங்கில் 12 லட்சம் வாக்காளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 11.8 விழுக்காடாகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 8 லட்சத்து 64 ஆயிரத்து 425 வாக்காளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடாகும்.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 3 மாநிலங்களின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் பிரமாஸ்திரத்தை வைத்து இருப்பவர்கள் இந்தியர் வாக்காளர்களே என்று அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக பெரித்த ஹரியான் மலாய் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!


