லோரி ஓட்டுநர் ஒவருவரிடமிருந்து 800 வெள்ளி லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் அரசு ஊழியர்களான 3 சட்ட அமலாக்க அதிகாரிகளை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்தது.
சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநர் சம்மனிலிருந்து விடுப்படுவதற்கு அவரிடமிருந்து அந்த மூன்று அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதாக மேல் விசாரணையில் தெரிவந்துள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில், கோலாலம்பூரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் 35 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் முகமட் ஃபௌஸி ஹுசின் தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


